Thursday, March 15, 2012

கர்ணன் - மீண்டும் பவனி


நடிகர் திலகத்தின் காவியங்களில் ஒன்றான 'கர்ணன்' திரைப்படம் 1964-ம் ஆண்டு வெளியானது .48 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலி ,ஒளி அமைப்புகள் மெருகேற்றப்பட்டு நாளை தமிழகமெங்கும் 50-க்கும் மேற்பட்ட திரைகளில் மறுவெளியீடு செய்யப்படுகிறது.



நடிகர் திலகம் கர்ணனாக , என்.டி.ராமராவ் கண்ணனாக கலக்கியிருக்கும் இந்த படத்தில் சாவித்திரி , தேவிகா ,முததுராமன் , அசோகன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள் ..வீரபாண்டிய கட்டபொம்மனை இயக்கிய பி.ஆர் .பந்துலு இயக்கியபடம் .வீர பாண்டிய கட்டபொம்மனுக்கு கனல் வசனம் தீட்டிய சக்தி கிருஷ்ணசாமியே இதற்கும் வசனம் தீட்டியுள்ளார் ..மெல்லிசை மன்னர் இசையில் அற்புதமான பாடல்கள் , காலத்தை கடந்த பிரம்மாண்டமான போர்க்களக் காட்சிகள் என சகல விதத்திலும் நிறைவான படம் .






நல்ல திரைப்படங்கள் காலத்தை கடந்தும் நிலைக்கும் என்பதை இந்த மறு வெளியீட்டூக்கு மக்கள் வழங்கும் ஆதரவு உறுதி செய்யும் .இதனால் இது போல காலத்தை வென்ற திரைப்படங்கள் பல வெளியாகி இன்றைய தலைமுறை ரசிகர்களையும் சென்றடையும் என்பதில் மகிழ்ச்சி .


Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives