Tuesday, September 19, 2006

போப்பாண்டவரும் இஸ்லாமும் -சர்ச்சை

சமீபத்தில் போப்பாண்டவர் இஸ்லாம் குறித்து பேசிய சில கருத்துக்கள் உலகம் முழுதும் இஸ்லாமியர்களின் கோபத்தை கிளறி பின்னர் அவரே மன்னிப்பு கேட்கும் நிலை உருவாகி இருக்கிறது ."முகமது நபியவர்கள் இவ்வுலகத்துக்கு கொண்டுவந்தது தீமை தான்" என்னும் பொருள் பட 14- நூற்றாண்டில் சொல்லப்பட்ட ஒரு கருத்தை மேற்கோள்காட்டி அவர் பேசியிருக்கிறார் .அது தன்னுடைய கருத்து அல்ல ,வெறும் மேற்கோள் தான் என்று அவர் சொல்வதை ஒரு வாதத்துக்காக ஏற்றுக்கொண்டாலும் ,இன்றுள்ள சூழ்நிலையில் இந்த மேற்கோளை குறிப்பிட்டு பேச வேண்டிய எந்த அவசியமும் இருப்பதாக தெரியவில்லை.

உலகின் வலிமை வாய்ந்த ஒரு மதத்தின் பிரதிநிதியாக இருக்கும் ஒருவர் இன்னொரு வலிமை வாய்ந்த மதத்தைப் பற்றி பேசும் போது பொறுப்புணர்வோடும் அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் யோசித்து பேசியிருக்க வேண்டும் .அவரவர் மனத்தளவில் சில கருத்துக்களை கொண்டிருக்கலாம் .ஆனால் பொறுப்பான நிலையில் இருக்கும் ஒருவர் தனது கருத்தை வெளிப்படையாக பொதுவில் பேசும் போது அது அவர் பிரதிநிதிக்கும் அமைப்பின் ஒட்டு மொத்த கருத்தாக எடுத்துக்கொள்ளப்படும் என்பதை அவர் அறியாதிருந்திருக்க மாட்டார்.அவர் சொன்னதில் உண்மை இருக்கிறதா இல்லையா என்பது பற்றி விவாதங்கள் இருக்கலாம் .ஆனால் ஒரு போப் இப்போதைக்கு ,அது மேற்கோளேயானாலும் ,அதை சொல்ல வேண்டிய தேவை இல்லை .அதனால் உலகில் இணக்கமின்மை தான் அதிகரிக்குமே தவிர நன்மை விளையப்போவதில்லை .

இவருக்கு முன்னால் இருந்த போப் ஜாண் பால் அவர்களும் பல சர்ச்சைகளுக்கு ஆள்பட்டாலும் ,இஸ்லாமியர்களோடு இணக்கமாக இருந்தவர் .மசூதிக்கு சென்ற முதல் போப் என்று பெயரெடுத்தவர் .போப் பெனடிக்ட் -ம் அவரிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் .முஸ்லிம்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர் மன்னிப்பு கோரியிருக்கிறார் .இது வரவேற்கப்பட வேண்டியது .இத்தகைய செயல்களை போப்பாண்டவர் தவிர்ப்பதே நல்லது .முஸ்லீம்கள் மூர்க்கமாக எதிர்க்கிறார்கள் என்பதற்காக பயந்து அல்ல .மாறாக ,இத்தகைய பேச்சுக்கள் உலகில் எந்த நன்மையையும் கொண்டுவராது ,நல்லிணக்கத்தை கீழிறுக்கும் என்பதால் ,மற்றவர்க்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய கடமை போப்பாண்டவருக்கு இருக்க வேண்டும் .

இன்னொரு கோணத்தில் ,இஸ்லாமை வன்முறையோடு தொடர்புபடுத்தி பேசியதாக குற்றம் சாட்டி பல தேவாலயங்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன .இதை கேள்விப்பட்டு எனக்கு சிரிப்பு தான் வருகிறது . ஒருவர் சாட்டிய குற்றம் தவறானது என்பதை நிரூபிக்க அதே குற்றத்தை செய்வது ..எங்கே போய் முட்டிக்கொள்வது?

இஸ்லாமிய சகோதரர்கள் காட்டிய எதிர்ப்பு நியாயமானது .ஆனால் சிலர் எதிர்ப்பை காட்டிய முறை நகைப்புக்குரியது.

Friday, September 08, 2006

அன்னையே! ஆரோக்கிய அன்னையே!

Photobucket - Video and Image Hosting

அன்னையே!
ஆரோக்கிய அன்னையே!
அழகுள்ள வேளையில்
ஆலயம் கொண்ட எங்கள் அன்னையே!

கடலின் அலைகள் காவியம் பாடும்
கார்முகில் கூட்டம் உன் கருணையை கூறும்
மடல் விரி தாழையும் மணமது வீசும்
மாதா உந்தன் மகிமையைச் சொல்லும்

உன் திருப்பாதம் தேடியே வந்தோம்
உன் எழில் கண்டு உள்ளத்தை தந்தோம்
கண்ணென எம்மை காத்தருள்வாயே!
கர்த்தரின் தாயே! துணையென்றும் நீயே!

பாடல் ஒலிவடிவம்

கருணை மழையே மேரி மாதா பாடல் -ஒலிவடிவம்

(செப்டம்பர் 8 -அன்னை மரி பிறந்தநாள் பெருவிழா)

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives