Monday, April 28, 2008
பண்பால் கவர்ந்த ஜாக்கிசான்!
சமீபத்தில் நடைபெற்ற கலைஞானி கமல்ஹாசனின் தசாதாவரம் பட பாடல் குறுந்தட்டு வெளியீட்டு விழாவில் தன்னுடைய எதார்த்த நடவடிக்கைகளின் மூலம் அனைவரையும் சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைத்தவர் உலக நட்சத்திரம் ஜாக்கிசான்.
குறுந்தட்டை கலைஞர் வெளியிட ஜாக்கிசான் பெற்றுக் கொண்டார் .அப்போது குறுந்தகட்டை சுற்றியிருந்த கவரையும் , நாடாவையும் வழக்கம் போல கீழே போட்டுவிட ,கொஞ்சம் கூட தாமதியாமல் அதை குனிந்து பொறுக்கிக் கொண்டு மேடையின் ஓரத்தில் குப்பைத் தொட்டி இருந்தால் அதை போட வேண்டும் என்ற எண்ணத்தில் குடு குடுவென்று ஓடிய ஜாக்கிசானை பார்த்து வியக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது .பாதி வழியில் இடை மறித்த கமல் அதை வாங்கி கைமாற்றி விட்டு ,ஜாக்கிசானை மீண்டும் இருக்கையில் அமருமாறு பணிக்க ,சின்ன குழந்தையின் குதூகலத்தோடு ஓடி வந்து ஜாக்கிசான் இருக்கையில் அமர்ந்தது கண்கொள்ளா காட்சி .
இங்கிருக்கும் வீடியோ காட்சியைப் பார்த்தால் ஜாக்கிசான் எந்த வித உள்ளுணர்வும் இல்லாமல் மிகவும் அனிச்சை செயல் போல இதைச் செய்ததை காணலாம் .அகில உலக பெரு நட்சத்திரமாக இருந்தாலும் ,ஒரு பணியை மற்றவர் செய்வார்கள் என எதிர்பார்க்காமல் ,அல்லது மற்றவரை செய்ய பணிக்காமல் ,பாராட்டு பெறும் எந்த நோக்கமும் இல்லாமல் ஜாக்கிசான் செய்த இந்த செயல் சிறியதாக இருந்தாலும் ,நமக்கு (குறிப்பாக குப்பையை கண்ட இடத்தில் தூக்கியெறியும் நம்மூர் பொதுஜனத்துக்கு) ஒரு பாடம் .
Subscribe to:
Posts (Atom)