தன் தள்ளாத வயதிலும் மாநிலம் முழுவதும் சுற்றி வந்து தனது பிரச்சாரத்தினால் கூட்டணியை தூக்கி நிறுத்தி ,இன்றும் தன்னை வசீகரத் தலைவராக நிரூபித்து ,வெற்றிக்கொடி நாட்டி தமிழகத்தின் முதல்வராக 5-வது முறை பொறுப்பேற்றிருக்கும் கலைஞர் அவர்களுக்கு என் வணக்கங்களும் வாழ்த்துக்களும்!
சுவாரஸ்யம் மிகுந்த இந்த தேர்தல் முடிவுகள் அனைத்து தரப்பினருக்கும் ஏதாவது ஒரு வகையில் மக்கள் அளித்திருக்கும் எச்சரிக்கைகளை தெளிவாக சொல்லியிருக்கிறது .
அதிமுக ஆட்சியை இழந்தாலும் ,மக்களின் நம்பிக்கையை முழுவதுமாக இழக்கவில்லை என்பதை அக்கட்சி வலிமை குறைந்த கூட்டணியிலும் பெற்ற பெருவாரியான வெற்றியும் ,வாக்குக்களும் புலப்படுத்துகின்றன .அதிமுக இதை சரியான கோணத்தில் எடுத்துக்கொண்டு பொறுப்புள்ள எதிர்கட்சியாக செயல்பட வேண்டும் என்பது எமது விருப்பமென்றாலும் ,அதன் தலைமை அந்த அளவுக்கு பக்குவப்பட்டது போல் தெரியவில்லை.
திமுக-வைப் பொறுத்தவரை கூட்டணி பலத்தால் ஆட்சியை கைப்பற்றியிருந்தாலும் ,பல இடங்களில் திமுக-வுக்கு மக்கள் எச்சரிக்கை மணி அடித்துள்ளார்கள் என்பது உண்மை.
திமுக-வின் கோட்டை எனப்படும் சென்னையில் அதிமுக இம்முறை 14-ல் 7 தொகுதிகளை கைப்பற்றியிருக்கிறது .திமுக வெற்றி பெற்ற பல தொகுதிகளில் கூட அதன் வாக்கு வித்தியாசம் திருப்தியுறும் அளவுக்கு இல்லை .இதற்கான காரணங்களை இதய சுத்தியோடு ஆராயவேண்டும் .சென்னையைப் பொறுத்தவரை அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட குடிநீர் தட்டுப்பாடை நீக்கும் திட்டங்கள் மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கின்றன என்பது என் எண்ணம் .திமுக வழக்கம் போல பாரம்பரிய கோட்டை என்றெல்லாம் இனிமேல் சால்ஜாப்பு சொல்ல முடியாது .மக்கள் இப்போது மாறியிருக்கிறார்கள் .பாரம்பரியமாக ஒரே கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென்ற எண்ணத்திலிருந்து பெருவாரியான மக்கள் வெளியே வந்து ,பிரச்சனைகள் அடிப்படையில் ஓட்டளிக்கும் பாங்கு இப்போது அதிகரித்து வருகிறது .திமுக-வின் கோட்டையை தகர்க்க சென்னையைப் பொறுத்தவரை ஜெயலலிதா எடுத்த சில முயற்சிகள் வழக்கத்துக்கு மாறாக பயனுள்ள விதத்தில் அமைந்தது என்பதை ஜெயலலிதா எதிர்ப்பாளரான என் போன்றவர்கள் ஒத்துக்கொள்வதில் ஒன்றும் தயக்கம் இல்லை .அந்த வகையில் ஜெயலலிதாவுக்கு பாராட்டுக்கள் .அதே வகையில் நல்லதை யார் செய்தாலும் அவர்களுக்கு ஆதரவு தருவோம் என்று சென்னை நகர மக்கள் கொடுத்திருக்கும் செய்தியை திமுக சரியான கோணத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் .வெறும் பாரம்பரிய கோட்டை என்னும் மாயையை மட்டும் வைத்து இனிமேல் மக்கள் கண்ணை மூடிக்கொண்டு தனக்கு வாக்களிப்பார்கள் என்று திமுக நினைப்பதை மாற்றிக்கொள்ள வேண்டும்.
இந்த தேர்தலில் சென்னையில் பாதிக்கு பாதி இடங்கள் ,கோவையில் மூன்றில் இரண்டு பங்கு இடங்கள் ,விருதுநகர்,தேனியில் பெருவாரியான இடங்கள் ,தூத்துக்குடி மற்றும் தஞ்சையில் பாதிக்கு பாதி இடங்களை அதிமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.
தினமலர் போன்ற பத்திரிகைகள் ,மாயவரத்தான் போன்ற வலைப்பதிவர்கள் அதிமுக 188 தொகுதிகளில் பெற்ற ஓட்டுக்களையும் ,திமுக 132 தொகுதிகளில் பெற்ற ஓட்டுக்களையும் ஒப்பிட்டு காமெடி செய்து மனத்திருப்தி அடைந்து கொள்ளலாம் .அதையும் மீறி கூட்டணி பலமின்றி அதிமுக பெற்ற ஓட்டுக்களை குறைத்து மதிப்பிட முடியாது தான் .
கலைஞர் அவர்கள் மற்றொரு விடயத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும் .தான் திமுக கோட்டை என்று நம்பிய பல பகுதிகள் திமுகவை கைவிட்டது போல ,பாரம்பரியமாக தனக்கு சாதகமில்லாததாக திமுக நினைக்கும் பல பகுதிகள் திமுக-வை கைதூக்கி விட்டுருக்கின்றன.. உதாரணமாக கலைஞர் அவர்கள் தனது பிரச்சார பயணத்தில் முற்றிலுமாக புறக்கணித்த குமரி மாவட்டம் திமுக கூட்டணிக்கு இமாலய வெற்றியை அளித்தது மட்டுமல்ல ,அதிமுக கூட்டணியை மூன்றாமிடத்துக்கு தள்ளி இரண்டு தொகுதிகளில் அதிமுக டெபாசிட் தொகையை இழக்க செய்திருக்கிறது(இது பற்றி தனிப்பதிவு விரைவில்) .இனிமேலாவது கலைஞரும் திமுக-வும் இது போன்ற முன் முடிவுகளின் அடிப்படையும் செயல்படாமல் இருப்பது நல்லது.
இந்த தேர்தலைப் பொறுத்தவரை மக்கள் எல்லா கட்சிகளுக்கும் ஒரேயடியாக ஆதரவும் தெரிவிக்கவில்லை ,முழுவதுமாக கைவிடவும் இல்லை .கலைஞரை முதல்வராக்கினாலும் திமுக-வுக்கு பல இடங்களில் எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார்கள் .அதிமுக-வை ஆட்சியை விட்டு அகற்றினாலும் முழுவதுமாக கைவிட்டு விடவில்லை .மதிமுக தோல்வியை தழுவினாலும் முதன் முறையாக சட்டமன்றத்தில் அடியெடுத்து வைக்கிறது .விடுதலைச் சிறுததைகள் 2 தொகுதிகளை கைப்பற்றியிருக்கிறார்கள் .பாமக 17 தொகுதிகளைப் பிடித்திருந்தாலும் மக்கள் கடுமையான எச்சரிக்கையை கொடுத்திருக்கிறார்கள் .விஜயகாந்தின் துணிச்சலுக்கு பரிசாக பெருவாரியான வாக்குகளையும் அளித்து அவரை சட்டமன்றத்துக்கும் அனுப்பியிருக்கிறார்கள் .சுயேட்சைகளை மட்டும் ஏன் விட்டுவைக்க வேண்டுமென்று அவர்களுக்கும் ஒரு தொகுதியை கொடுத்திருக்கிறார்கள் .
எல்லாவற்றிக்கும் மேலே முதல் முறையாக தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை கொண்டு வந்திருக்கிறார்கள் .ஒரு காலத்தில் மலையாள சினிமாவையும் தமிழ் சினிமாவையும் ஒப்பிட்டு தமிழ் சினிமாவை அதீதமாக கேலி செய்யும் நிலைமை இருந்தது .இன்று தமிழ் சினிமா அதன் தரத்தை உயர்த்தி அந்த இடைவெளியை குறைத்திருக்கிறது .இப்போது அரசியலும் அந்த பாதையில் மாறிக்கொண்டிருப்பதாக நான் நம்புகிறேன் .மாறி மாறி ஆட்சியை ஒப்படைக்கும் கேரளாவைப்போல கடந்த நான்கு முறை தொடர்ந்து தமிழகம் ஆட்சி மாற்றத்தை சந்தித்திருக்கிறது .கேரளா போன்று முழுமையான கூட்டணியாட்சி இல்லையெனினும் கூட்டணி ஆதரவோடு ஆட்சி நீடித்து அமையும் என நம்புகிறேன் .
இது போன்று கேரளத்தை பின்பற்றி அரசியலில் எளிமையும் ,நாகரீகமும் தமிழகத்தில் வளரும் என நம்புவோம் .70% என்ற அளவில் வாக்களித்து ஜனநாயகத்தின் மேலுள்ள நம்பிக்கையை அதிகமாக்கியிருக்கும் தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு வாழ்த்துக்கள்!
அனுபவமும் ஆற்றலும் கொண்ட கலைஞர் தலைமையில் தமிழகம் ஆக்க பூர்மான வளர்ச்சி பெறும் என நம்புகிறேன்..வாழ்க தமிழ்! வளர்க தமிழகம்!!
Showing posts with label திமுக. Show all posts
Showing posts with label திமுக. Show all posts
Monday, May 15, 2006
Sunday, March 05, 2006
கலைஞர் தடுமாறுகிறார்
கடந்த 35 ஆண்டுகளாக கலைஞர் தமிழக அரசியலின் மையப்புள்ளி .வெற்றியும் தோல்வியும் அவரில்லாமல் இல்லை .'அரசியல் ராஜதந்திரி' என வர்ணிக்கப்பட்டிருக்கிறவர் .மோதுகின்ற இரு தலைகளில் எதிர் புறம் நிற்கிற போட்டியாளர் மாறியிருக்கிறாரே தவிர கலைஞர் எப்போதும் இரண்டில் ஒன்றாக நிலையாக இருந்திருக்கிறார்(காமராஜரிலிருந்து ஜெயலலிதா வரை) .ஆயிரம் விமரிசனங்கள் ,கோப தாபங்கள் ,எரிச்சல்கள் இருந்தாலும் ,அவருக்கு மனதில் நீங்கா இடத்தை கொடுத்திருக்கும் அனுதாபிகளில் நானும் ஒருவன் .ஆனால் இப்போது கலைஞரை 'ராஜதந்திரி' என்றழைப்பது கடினமாக இருக்கிறது என்பது கசப்பான உண்மை.
அரசியல் களத்தில் இப்போது வைகோ அதிரடி முடிவு எடுத்திருக்கிறார் .அரசியல் காய் நகர்த்தலில் கலைஞர் எதார்த்தத்தை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கிறார் என்றே நான் கருதுகிறேன் .கலைஞருக்கோ அல்லது திமுக-வுக்கோ விழும் ஓட்டுக்கள் எல்லாம் நேரடியாக திமுகவை ஆதரித்து விழும் ஓட்டுக்கள் அல்ல .ஜெயலலிதாவை வர விடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக கலைஞருக்கு ஓட்டுப்போடும் ஒரு பெரும் கூட்டம் உண்டு.ஆனால் கலைஞருக்கு ஜெயலலிதாவை எக்காரணம் கொண்டும் வர விடக்கூடாது என்ற ஒரே குறிக்கோள் இருப்பதாக தெரியவில்லை .ஆனால் மற்ற கட்சிகள் மட்டும் அப்படி நினைக்க வேண்டும் என நினைக்கிறார்.
மதிமுக என்ற இயக்கம் திமுக-வை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட கட்சி .ஆனாலும் வைகோ பெரும்பாலும் திமுக-விடம் நட்பு பாராட்டியே வந்திருக்கிறார்.அதற்காக தனித்தன்மையை இழந்திருக்கிறார் .12 ஆண்டுகளாகியும் சட்டமன்றத்தில் நுழைய முடியாத நிலை .கணிசமான வாக்குகளை கையில் வைத்திருந்தும் அதற்குரிய அங்கிகாரம் கிடைக்காத நிலை .பாமக போன்று சாதுர்யமாக கூட்டணி அமைத்து சட்டமன்ற பலத்தை பெருக்கிக்கொள்ள வைகோவுக்கு தெரியவில்லை .பலன் என்ன ,கூட்டணி மூலம் கிடைத்த சட்டமன்ற எண்ணிக்கையை வைத்து பாமாக -வை விட சிறிய கட்சியாக அறியப்படுகிற மாயை .கலைஞர் போன்ற 'ராஜதந்திரி'(?) கூட அப்படி நம்புகிற நிலைமை . அதைப் போக்குவதற்கு ஒரே வழி சட்டமன்றத்தில் கணிசமான இடங்களைப் பிடித்து உறைக்க வேண்டியவர்களுக்கு உறைக்க வைப்பது .அதிமுக 35 சீட்டுகள் கொடுக்க முன்வந்தும் ,திமுக -வில் 25 கிடைத்தால் கூட தி.மு.க வோடு தங்கிவிட வைகோ தயாராயிருந்ததாகவே தெரிகிறது .(பாமக-வுக்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை நாடறியும்) .ஆனால் கலைஞர் நடந்து கொண்ட விதம் வெறும் வீம்பாகத்தான் எனக்குத் தெரிகிறது .ஜெயலலிதாவை தோற்கடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை விட ,மு.க ஸ்டாலினுக்குள்ள பிடியை விட்டுவிடக்கூடாது என்பதே அவருக்கு பிரதானமாக இருக்கிறது .பாதி தமிழகத்தில் மட்டும் செல்வாக்குள்ள பாமக அவரை மிரட்ட முடிகிறது .ஆனால் மதிமுக-வை அவர் மதிக்கக்கூட இல்லை ."22 தான் கொடுக்க முடியும் .இருந்தால் இரு. இல்லையென்றால் போ" என்ற தொனியில் பேசுகிறார் .கூட்டணி மாறுவதால் வைகோ இழக்கப்போவது கொஞ்சம் மரியாதையை ,பெறப்போவது அதிகம் MLA-க்களை .ஆனால் கலைஞர் இழக்கப் போவது மீண்டும் ஜெயலலிதாவிடம் ஆட்சியை.அது அவருக்கு பெரிதாக இல்லை போலும் .ஜெயலலிதாவும் வரக்கூடாது ,வைகோவும் தனக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசையாக இருக்கிறது அவர் போக்கு.இது தான் வேதனையான உண்மை.
நான் விரும்புகிறேனோ இல்லையோ,வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக நான் நினைக்கிறேன்.அதற்கு சில காரணங்கள்.
1."மயிரைக் கட்டி மலையை இழுப்போம் .வந்தா மலை .போனா மயிரு" என்ற ஜெயலைதாவின் அணுகுமுறை ,கலைஞர் இறங்கு முகத்திலும் ஜெயலலிதா ஏறுமுகத்திலும் இருப்பதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருப்பது மறுக்க முடியாத உண்மை.
2.நகர்புறங்கள் திமுக கோட்டை என்ற நெடுங்கால பாரம்பர்யம் கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து வருகிறது .
3.இளைய தலைமூறை பொதுவாக திமுக-வை ஆதரிக்கும் வழக்கம் மாறிவிட்டது .சன் டீவி போன்ற திமுக ஆதரவு ஊடகங்கள் இதற்கு பெரும்பங்காற்றியிருக்கின்றன .திமுக அனுதாபிகளுக்கே எரிச்சல் வரும் போது மற்றவர்களுக்கு சொல்லத்தேவையில்லை.
4.அதிமுக வுக்கு ஏற்கனவே அதிகமாக இருக்கும் தாய்க்குலத்தின் ஆதரவு இப்போது உச்சத்துக்கு போயிருப்பதாக தெரிகிறது .கருத்துக் கணிப்புகள் ,வெளிப்படையாகத் தெரியும் எழுச்சி இவையெல்லாம் மீறி பல முறை அதிமுக ஆச்சரிய வெற்றி ஈட்டியதற்கு தாய்க்குலம் ஓட்டு தான் பிரதானம் .கிராமப் பகுதிகளில் பெண்கள் ஓட்டுப்போடுவதை திருவிழாவுக்கு செல்வது போல சீவி சிங்காரித்து பெருமிதத்தோடு நிறைவேற்றுகிறார்கள் .அரசியல் கட்சி சார்ந்த ஆண்கள் தங்களுக்குள்ள கூட்ட பலத்தை வைத்து கணக்கு போட்டுக்கொண்டிருக்க ,திருநெல்வேலி அல்வாவை கிண்டிக் கொடுப்பது இவர்கள் தான்.
5.ஜெயலலிதாவின் அராஜகங்கள் பலவற்றையும் பலரும் தலைமைக்குரிய பண்பாகவும் ,துணிவின் இலக்கணமாகவும் நம்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.
6.குறைகூறல்களை மீறி சுனாமி நிவாரணத்திலும் ,மற்ற சில விடயங்களிலும் நல்ல பெயர் எடுத்திருக்கிறார்.
இப்படி நிறைய சொல்லிக்கொண்டு போகலாம் .எனவே என் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை சேர்க்காமல் ,அதிமுக கூட்டணிக்கு அதிக வெற்றிவாய்ய்பு இருப்பதாகவே நான் கருதுகிறேன் .கூட்டணி ஆட்சி என்றெல்லாம் தமிழகத்தில் கனவு மட்டுமே காணலாம் .வச்சா குடுமி ..அடிச்சா மொட்டை தான் .யார் கண்டது மதிமுக சட்டமன்றத்தில் இரண்டாவதோ மூன்றாவதோ பெரிய கட்சியாக நுழைந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.
கலைஞர் தடுமாறுகிறார் பிள்ளைப்பாசத்தில்..வருத்தமாக இருக்கிறது.
அரசியல் களத்தில் இப்போது வைகோ அதிரடி முடிவு எடுத்திருக்கிறார் .அரசியல் காய் நகர்த்தலில் கலைஞர் எதார்த்தத்தை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கிறார் என்றே நான் கருதுகிறேன் .கலைஞருக்கோ அல்லது திமுக-வுக்கோ விழும் ஓட்டுக்கள் எல்லாம் நேரடியாக திமுகவை ஆதரித்து விழும் ஓட்டுக்கள் அல்ல .ஜெயலலிதாவை வர விடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக கலைஞருக்கு ஓட்டுப்போடும் ஒரு பெரும் கூட்டம் உண்டு.ஆனால் கலைஞருக்கு ஜெயலலிதாவை எக்காரணம் கொண்டும் வர விடக்கூடாது என்ற ஒரே குறிக்கோள் இருப்பதாக தெரியவில்லை .ஆனால் மற்ற கட்சிகள் மட்டும் அப்படி நினைக்க வேண்டும் என நினைக்கிறார்.
மதிமுக என்ற இயக்கம் திமுக-வை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட கட்சி .ஆனாலும் வைகோ பெரும்பாலும் திமுக-விடம் நட்பு பாராட்டியே வந்திருக்கிறார்.அதற்காக தனித்தன்மையை இழந்திருக்கிறார் .12 ஆண்டுகளாகியும் சட்டமன்றத்தில் நுழைய முடியாத நிலை .கணிசமான வாக்குகளை கையில் வைத்திருந்தும் அதற்குரிய அங்கிகாரம் கிடைக்காத நிலை .பாமக போன்று சாதுர்யமாக கூட்டணி அமைத்து சட்டமன்ற பலத்தை பெருக்கிக்கொள்ள வைகோவுக்கு தெரியவில்லை .பலன் என்ன ,கூட்டணி மூலம் கிடைத்த சட்டமன்ற எண்ணிக்கையை வைத்து பாமாக -வை விட சிறிய கட்சியாக அறியப்படுகிற மாயை .கலைஞர் போன்ற 'ராஜதந்திரி'(?) கூட அப்படி நம்புகிற நிலைமை . அதைப் போக்குவதற்கு ஒரே வழி சட்டமன்றத்தில் கணிசமான இடங்களைப் பிடித்து உறைக்க வேண்டியவர்களுக்கு உறைக்க வைப்பது .அதிமுக 35 சீட்டுகள் கொடுக்க முன்வந்தும் ,திமுக -வில் 25 கிடைத்தால் கூட தி.மு.க வோடு தங்கிவிட வைகோ தயாராயிருந்ததாகவே தெரிகிறது .(பாமக-வுக்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை நாடறியும்) .ஆனால் கலைஞர் நடந்து கொண்ட விதம் வெறும் வீம்பாகத்தான் எனக்குத் தெரிகிறது .ஜெயலலிதாவை தோற்கடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை விட ,மு.க ஸ்டாலினுக்குள்ள பிடியை விட்டுவிடக்கூடாது என்பதே அவருக்கு பிரதானமாக இருக்கிறது .பாதி தமிழகத்தில் மட்டும் செல்வாக்குள்ள பாமக அவரை மிரட்ட முடிகிறது .ஆனால் மதிமுக-வை அவர் மதிக்கக்கூட இல்லை ."22 தான் கொடுக்க முடியும் .இருந்தால் இரு. இல்லையென்றால் போ" என்ற தொனியில் பேசுகிறார் .கூட்டணி மாறுவதால் வைகோ இழக்கப்போவது கொஞ்சம் மரியாதையை ,பெறப்போவது அதிகம் MLA-க்களை .ஆனால் கலைஞர் இழக்கப் போவது மீண்டும் ஜெயலலிதாவிடம் ஆட்சியை.அது அவருக்கு பெரிதாக இல்லை போலும் .ஜெயலலிதாவும் வரக்கூடாது ,வைகோவும் தனக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசையாக இருக்கிறது அவர் போக்கு.இது தான் வேதனையான உண்மை.
நான் விரும்புகிறேனோ இல்லையோ,வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக நான் நினைக்கிறேன்.அதற்கு சில காரணங்கள்.
1."மயிரைக் கட்டி மலையை இழுப்போம் .வந்தா மலை .போனா மயிரு" என்ற ஜெயலைதாவின் அணுகுமுறை ,கலைஞர் இறங்கு முகத்திலும் ஜெயலலிதா ஏறுமுகத்திலும் இருப்பதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருப்பது மறுக்க முடியாத உண்மை.
2.நகர்புறங்கள் திமுக கோட்டை என்ற நெடுங்கால பாரம்பர்யம் கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து வருகிறது .
3.இளைய தலைமூறை பொதுவாக திமுக-வை ஆதரிக்கும் வழக்கம் மாறிவிட்டது .சன் டீவி போன்ற திமுக ஆதரவு ஊடகங்கள் இதற்கு பெரும்பங்காற்றியிருக்கின்றன .திமுக அனுதாபிகளுக்கே எரிச்சல் வரும் போது மற்றவர்களுக்கு சொல்லத்தேவையில்லை.
4.அதிமுக வுக்கு ஏற்கனவே அதிகமாக இருக்கும் தாய்க்குலத்தின் ஆதரவு இப்போது உச்சத்துக்கு போயிருப்பதாக தெரிகிறது .கருத்துக் கணிப்புகள் ,வெளிப்படையாகத் தெரியும் எழுச்சி இவையெல்லாம் மீறி பல முறை அதிமுக ஆச்சரிய வெற்றி ஈட்டியதற்கு தாய்க்குலம் ஓட்டு தான் பிரதானம் .கிராமப் பகுதிகளில் பெண்கள் ஓட்டுப்போடுவதை திருவிழாவுக்கு செல்வது போல சீவி சிங்காரித்து பெருமிதத்தோடு நிறைவேற்றுகிறார்கள் .அரசியல் கட்சி சார்ந்த ஆண்கள் தங்களுக்குள்ள கூட்ட பலத்தை வைத்து கணக்கு போட்டுக்கொண்டிருக்க ,திருநெல்வேலி அல்வாவை கிண்டிக் கொடுப்பது இவர்கள் தான்.
5.ஜெயலலிதாவின் அராஜகங்கள் பலவற்றையும் பலரும் தலைமைக்குரிய பண்பாகவும் ,துணிவின் இலக்கணமாகவும் நம்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.
6.குறைகூறல்களை மீறி சுனாமி நிவாரணத்திலும் ,மற்ற சில விடயங்களிலும் நல்ல பெயர் எடுத்திருக்கிறார்.
இப்படி நிறைய சொல்லிக்கொண்டு போகலாம் .எனவே என் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை சேர்க்காமல் ,அதிமுக கூட்டணிக்கு அதிக வெற்றிவாய்ய்பு இருப்பதாகவே நான் கருதுகிறேன் .கூட்டணி ஆட்சி என்றெல்லாம் தமிழகத்தில் கனவு மட்டுமே காணலாம் .வச்சா குடுமி ..அடிச்சா மொட்டை தான் .யார் கண்டது மதிமுக சட்டமன்றத்தில் இரண்டாவதோ மூன்றாவதோ பெரிய கட்சியாக நுழைந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.
கலைஞர் தடுமாறுகிறார் பிள்ளைப்பாசத்தில்..வருத்தமாக இருக்கிறது.
Subscribe to:
Posts (Atom)
