tag:blogger.com,1999:blog-10060619.post115984881036638647..comments2023-12-14T00:00:13.154+08:00Comments on கடற்புறத்தான் கருத்துக்கள்: இஸ்லாமும் இயேசுவும்(ஈஸா நபி)ஜோ/Joehttp://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-10060619.post-62458658321946224552010-09-08T21:17:33.592+08:002010-09-08T21:17:33.592+08:00ஹாய் ஜோ
நான் உங்கள் தளத்திற்கு புதியவன் .
நல்ல பதி...ஹாய் ஜோ<br />நான் உங்கள் தளத்திற்கு புதியவன் .<br />நல்ல பதிவு .<br />http://www.torrentdownloads.net/torrent/249692/Zeitgeist+Remastered+Edition+2007+DVDRip+XviD<br />இது நீங்க அவசியம் காணவேண்டிய படம் சிரமம் பார்க்காமல் பார்க்கவும் .<br />நான் இதை பதிவிடலாம் என்று இருக்கிறேன் . அனுபவம் உள்ள நீங்கள் செய்தால் பயனுள்ளதாக இருக்கும்.<br />என்று நம்புகிறேன். பதிலுக்கு காத்திருக்கிறேன்.அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-25129757162450962792007-06-22T18:16:00.000+08:002007-06-22T18:16:00.000+08:00HAI THIS NICE CONVERSATION,PLZ CAN YOU START THIS ...HAI THIS NICE CONVERSATION,PLZ CAN YOU START THIS TYPE BIBLICAL MATTER IN FUTURE.THIS IS IS MY BLOG<BR/>http://www.clementraj.blogspot.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1160622235650614842006-10-12T11:03:00.000+08:002006-10-12T11:03:00.000+08:00மிக நல்ல பதிவு !மிக நல்ல பதிவு !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1160392066134854612006-10-09T19:07:00.000+08:002006-10-09T19:07:00.000+08:00நல்ல பதிவு. மதங்களுக்கிடையில் திறந்த கருத்துப் பரி...நல்ல பதிவு. <BR/><BR/>மதங்களுக்கிடையில் திறந்த கருத்துப் பரிமாற்றங்கள் இக்காலகட்டத்தின் மிக அவசியமான ஒன்றாகும். அவை சமூகத்தில் இணக்கத்தையும் பரஸ்பர புரிந்துணர்வையும் ஏற்படுத்தும்.<BR/><BR/>நல்ல தொடக்கமிட்டுள்ளீர்கள்.<BR/><BR/>வாழ்த்துக்கள்.<BR/><BR/>தமிழ் செல்வன்தமிழ் செல்வன்https://www.blogger.com/profile/01271958640909115458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1160206038928508512006-10-07T15:27:00.000+08:002006-10-07T15:27:00.000+08:00ஜோ, மேலே சொன்ன ப்ன்னூட்டத்தை சற்று மாற்றி ஒரு பதிவ...ஜோ, <BR/><BR/>மேலே சொன்ன ப்ன்னூட்டத்தை சற்று மாற்றி ஒரு பதிவாக பொட்டு இருக்கிறேன்..<BR/><BR/>http://manathinoosai.blogspot.com/2006/10/blog-post_07.html<BR/><BR/>பார்த்து விட்டு தங்கள் கருத்தை சொல்லவும்.நன்றிமனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1160198428717479042006-10-07T13:20:00.000+08:002006-10-07T13:20:00.000+08:00ஜோ, உடனடியாக நன்றி சொல்ல இயலாமல் போய் விட்டது......ஜோ, <BR/>உடனடியாக நன்றி சொல்ல இயலாமல் போய் விட்டது... <BR/><BR/>தங்களின் நீண்ட விளக்கத்துக்கு நன்றி. ஒரு சில விசயங்களை புதிதாக தெரிந்து கொண்டேன். நன்றி.<BR/><BR/><BR/>//இயேசு தன்னைத் தானே இறைவனின் மகனாக எங்கும் சொல்லிக்கொண்டதில்லை//<BR/><BR/>அது போலவே அவர் தன்னை வணங்க சொல்லி எங்கும் சொல்ல வில்லை என்பது போலவும் தோன்றுகிறது... அப்படி இருக்க அவரை வணங்குவது சரியா என்பது எனக்கு புரிய வில்லை.. <BR/><BR/>எனிவே.. எனக்கு உங்களின் இந்த வரிகள் மிக பிடித்து இருக்கின்றன.<BR/>//எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிற அளவுக்கு மத நம்பிக்கை கிடையாது//<BR/>என்னை யொசிக்க வைக்கின்றன..<BR/><BR/>நானும் யோசித்து பார்க்கையில் இது போன்றே பல தருணங்களில் உணர்ந்து இருக்கிறேன்.. பல நேரங்களில் நான் ஆத்திகனாகவும், நாத்திகனாகவும், இருந்து இருக்கிறேன். கடவுள் இருக்கிறாறா அவர் நல்லவரா? என்றெல்லாம் பல முறை கேள்விகள் எழுந்ததுண்டு. எதனையும் அறுதியிட்டு முடிவுக்கு வர முடியாததுதான் இதன் முடிவு. <BR/>எந்த ஒரு மனிதனையும் மனிதனாக மதிக்க வேண்டும் என்பதே என்றும் என் நிலைப்பாடு.. <BR/><BR/>மதம் ஒவ்வொருவருக்கும் அவரது (அவர்களால் கட்டுப்படுத்த முடியாத)பிறப்பினால் அடையாளமாகிறது.. உலகில் ஒரே ஒரு மதம்தான் உண்மை என்றால், மற்ற மதத்தில் மனிதர்கள் தோன்ற காரணமான அந்த கடவுளே குற்றவாளி.<BR/>இதனை பிடித்துக் கொண்டு கொஞ்சம் மேலே போனால், மற்ற மதங்கள் ஏன் தோன்றின? தோன்ற வேண்டிய அவசியம் என்ன? ஏன் கடவுள் அதனை கட்டுப்படுத்த வில்லை. ஏன் மனிதர்கள் அனைவரும் நல்லவர்களாக இருப்பதில்லை?<BR/>(ஒரு மனிதனை உறுவாக்குவது அவனுடைய சூழ்னிலைகளும் அவன் சந்திக்கும் மனிதர்களும்தான். அதனையும் அவன் கட்டுப்படுத்த முடிவதில்லை.)<BR/>இது போல இன்னும் பற்பல கேள்விகள் பிறக்கின்றன..<BR/><BR/>ஆனால் ஒன்று.. மதங்களின் (சரியான) பழக்கங்களை பின்பற்றுகையில் மனிதன் தவறுகள் செய்யாமல் தன்னை காத்துக்கொள்கிறான். எப்படி சட்டங்கள் ஒரு குடிமகனை தவறுகள் செய்தால் தண்டனை உண்டு என பயமுறுத்தி அவன் தீய வழியில் செல்லாமல் இருக்க பயன்படுகிறதோ அது போல. ஆகவே மனித குலத்திற்கு பாதை தெரிந்து நடக்க மதங்கள் தேவை. இந்த நிலையிலேயே மதங்களுக்கான மதிப்பு இருக்க வேண்டும். <BR/>அடுத்தவர் மதத்தினை, நம்பிக்கைகளை மதிக்க கூடிய மனநிலை காலத்தின் கட்டயமாகிறது.. அதே நேரத்தில் அந்த நம்பிக்கைகள் மற்ற மனிதரை காயப்படுத்தாமல் இருக்க வேண்டும். தவறாக இருப்பின் <BR/>விவாதிக்ககூடிய, தவறு இருந்தால் மாற்றிகொள்ளக்கூடிய சூழ்நிலை நிலவ வேண்டும். <BR/><BR/>சிறு வயதில் படித்த இந்த வரிகள் ஞாபகம் வருகிறது..மதம் என்பது குளிர் காலத்தில் எரியும் நெருப்பு போன்றது..தூர விலகினால் குளிரும்.. மிக மிக அருகில் நெருங்கினால் தீயினால் எரித்து விடும். <BR/><BR/>*******<BR/><BR/>பதில் நீண்டதாக போய்விட்டது.. இந்த ப்ன்னூட்டத்தையே சிறிது மாற்றம் செய்து ஒரு தனி பதிவாக பொடலாம் என்றும் தோன்றுகிறது. நன்றி.மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1160066339665584072006-10-06T00:38:00.000+08:002006-10-06T00:38:00.000+08:00செந்தழல் ரவி, உங்கள் வருகைக்கு நன்றி!செந்தழல் ரவி,<BR/> உங்கள் வருகைக்கு நன்றி!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1160059742493615972006-10-05T22:49:00.000+08:002006-10-05T22:49:00.000+08:00பகுத்தறிவாளன், உங்கள் பின்னூட்டத்தை முழுவதும் வெ...பகுத்தறிவாளன்,<BR/> உங்கள் பின்னூட்டத்தை முழுவதும் வெளியிட முடியாமைக்கு வருந்துகிறேன் .நீங்கள் என்னிடம் கேட்டுள்ள கேள்விகளுக்கு பின்னர் பதிலளிக்க முயல்கிறேன்.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1160040648662865912006-10-05T17:30:00.000+08:002006-10-05T17:30:00.000+08:00கல்வெட்டு,உங்கள் வருத்தம் நியாயமானது .அதற்கு ஏதாவத...கல்வெட்டு,<BR/>உங்கள் வருத்தம் நியாயமானது .அதற்கு ஏதாவது விளக்கம் கிடைக்கிறதா என காத்திருப்போமே.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1160040559504379072006-10-05T17:29:00.000+08:002006-10-05T17:29:00.000+08:00பதிவுக்கு நன்றி ஜோ..பதிவுக்கு நன்றி ஜோ..ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1160035679960625822006-10-05T16:07:00.000+08:002006-10-05T16:07:00.000+08:00மனதின் ஓசை, அருமையான கேள்வி ஒன்றை கேட்டிருக்கிறீ...மனதின் ஓசை,<BR/> அருமையான கேள்வி ஒன்றை கேட்டிருக்கிறீர்கள் .ஆனால் அதற்கு சரியான விளக்கம் சொல்லுகிற அளவுக்கு எனக்கு மத அறிவோ வயதோ இல்லை .எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிற அளவுக்கு மத நம்பிக்கை கிடையாது .இருந்தாலும் எனக்கு தெரிந்ததை நான் சொல்கிறேன்.<BR/><BR/>யூத ,கிறிஸ்தவ ,இஸ்லாம் மதங்கள் ஒரே வழி வந்தவை என்பதை நீங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன் .மூவரும் ஒரே இறைவனைத் தான் வணங்குகின்றனர் .யார் ஆபிரகாமின் கடவுளோ ,யார் மோயீசனின் கடவுளோ அவரே இந்த மூன்று மதத்தவரின் கடவுள் .<BR/><BR/>1.ஆதாமிலிருந்து ,ஆபிரகாம்,மோயீசன் வழி வந்த இறைவாக்கினர்களை யூதர்கள் நம்புகின்றனர் .இவர்களுக்கு மேலாக மெசியா அல்லது இரட்சகர் ஒருவரை இறைவன் வாக்களித்திருப்பதாக யூதர்கள் நம்புகின்றனர் .அவர் தான் இயேசு என்று கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர் .ஆனால் இயேசுவை யூதர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை .வாக்களிக்கபட்ட மெசியா வருவார் என அவர்கள் இன்னும் காத்திருக்கின்றனர் .<BR/><BR/>2.கிறிஸ்தவர்கள் யூதர்கள் நம்புகின்ற இறைவாக்கினர்களை நம்புவதோடு ,இயேசுவை வாக்களிக்கபட்ட மெசியாவாக நம்புகின்றனர் .இறைவன் தன் குமாரனை இந்த உலகுக்கு மனித உருவில் அனுப்பியதாகவும் ,அதனாலேயே அவர் இறையருளால் ஒரு கன்னியின் கருவில் உருவாகி பிறந்ததாகவும் கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர் .இயேசு தன்னைத் தானே இறைவனின் மகனாக எங்கும் சொல்லிக்கொண்டதில்லை .ஆனால் இயேசு இறைவனின் குமாரன் என்பது பைபிளின் சில இடங்களில் குறிப்பிடபட்டிருக்கிறது<BR/>--------------------------------------------------<BR/>"ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில், <BR/><BR/>தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிகையின் பேர் மரியாள். <BR/><BR/>அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான். <BR/><BR/>அவளோ அவனைக்கண்டு அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள். <BR/><BR/>தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே, நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய். <BR/><BR/>இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்; அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. <BR/><BR/>அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; "<BR/>--------------------------------------------------------<BR/><BR/>இது போக பைபிள் முழுவது இயேசு இறைவனை 'தந்தை' என்றே குறிப்பிடுகிறார் .கிறிஸ்தவர்கள் ஒரே கடவுளை வணங்கினாலும் கடவுள் தமத்திரித்துவமாக (Trinity) இருப்பதாக நம்புகின்றனர் .பிதா ,சுதன் ,பரிசுத்த ஆவி என்ற மூன்றும் ஒரே கடவுளின் மூன்று நிலைகளாக நம்புகின்றனர் .இதில் சுதன் என்பது இயேசுவை குறிக்கிறது .அவரே மனிதனாக இவ்வுலகத்துக்கு இயேசுவாக வந்ததாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர்.<BR/><BR/>3.இஸ்லாமை பொறுத்தவரை அவர்களும் அனைத்து இறைவாக்கினர்களையும் ,அதோடு இயேசுவை ஒரு இறைவாக்கினராகவும் ,இறுதியாக முகமது அவர்களை இறுதி இறைவாக்கினராகவும் நம்புகின்றனர் .<BR/><BR/>யூதர்கள் முற்றிலும் புறக்கணித்த ,கிறிஸ்தவர்கள் தேவகுமாரனாக ஏற்றுக்கொண்ட இயேசுவை முஸ்லீம்கள் இறைவாக்கினர்களில் ஒருவராக நம்புகிறார்கள் (இறைமகனாக அல்ல) .இயேசு கன்னியிடம் கருத்தாங்கி பிறந்ததை நம்பும் முஸ்லீம்கள் இயேசு சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததாக கிறிஸ்தவர்கள் நம்புவதை ஏற்கவில்லை .இயேசு சிலுவையில் அறையப்படாமல் இறைவன் அவரை காத்து ,உயிரோடு வானகம் எடுத்துக்கொண்டதாகவும் ,இன்றும் அவர் மரணிகாமலே வாழ்வதாகவும் ,உலகின் கடைசி நாளில் அவர் மீண்டும் உலகுக்கு வந்து வாழ்ந்து மரணிப்பார் எனவும் முஸ்லீம்கள் நம்புகின்றனர் .இது தான் வேறுபாடு என நான் நினைக்கிறேன்.<BR/><BR/>முகமது நபியவர்கள் இஸ்லாம் மத கோட்பாடுகளை வரையறுத்து அதை ஒரு மதமாக நிறுவியது போல இயேசு எந்த மதத்தையும் நிறுவவில்லை .இயேசு இறை வார்த்தைகளை அறிவித்தாரே தவிர கிறிஸ்தவ மதத்தை அவர் தோற்றுவிக்கவில்லை .அவரை நம்பியவர்கள் இயேசு உயிர்த்து விண்ணேறியபின் ,இயேசுவை பின்பற்றியவர்கள் கிறிஸ்துவர்கள் என அறியப்பட்டார்கள் .அது ஒரு திருச்சபையாக மாறியது .ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1160031572403874832006-10-05T14:59:00.000+08:002006-10-05T14:59:00.000+08:00சகோதரர் ஜோ அவர்களே...உங்கள் பதிவை அடிக்கடி படிப்பவ...சகோதரர் ஜோ அவர்களே...<BR/>உங்கள் பதிவை அடிக்கடி படிப்பவன்.. நீங்கள் விவாதத்திற்கு களம் அமைத்துக்கொடுக்கும் விதம் அருமை. தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.<BR/><BR/>எனக்கு ஒரு சந்தேகம்...நான் அதிகம் தெரிந்தவன் இல்லை... (எனக்கு தெரிந்த சிறு விவரங்களின்படி) "இஸ்லாமும் கிருத்துவமும் நிறைய கருத்துக்களில் ஒன்றுபட்டாலும் எப்படி விலகியே நிற்கின்றன" என அதிசயிப்பவன்...அத்ற்கு முக்கிய காரணம் இயேசுவை வழிபடுவதில் வேற்றுமை இருப்பதுதானோ என கருதுகிறேன்..<BR/>என்னுடைய முக்கிய ஐயம் : "இயேசு எங்கேயாவது தான் கடவுள் என்றோ அல்லது தன்னை வனங்குங்கள் என்றோ நேரடியாக கூறி இருக்கிறாரா?"<BR/><BR/>இது இந்த பதிவை திசை திருப்பும் என கருதுகிறேன்.. அதனால் வெளியிடுவதை தாங்களே தீர்மானியுங்கள்.. தனிப்பதிவாக போட்டாலும் சம்மதம்..தனி மடலில் பதில் சொன்னாலும் சரி..<BR/><BR/>இது என்னுள் சிலநாட்களாக உள்ள கேள்வி.. கேட்க கூடிய சூழல் இங்கே நிலவியதால் கேட்கிறேன்.. நான் இதுவரை மனிதரிடத்தில் மதம் பார்த்தது இல்லை..பழகும் விதம் மட்டுமே பார்த்து இருக்கிறேன்..மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1160029062914523022006-10-05T14:17:00.000+08:002006-10-05T14:17:00.000+08:00தருமி,உங்கள் இரண்டாம் கட்டளை//You open your eyes. ...தருமி,<BR/>உங்கள் இரண்டாம் கட்டளை<BR/>//You open your eyes. அவர் சொன்னார்..இவர் சொன்னாரென்பதை விடவும் நாமே கொஞ்சம் யோசித்தல் தவறில்லையே.//<BR/><BR/>கண்டிப்பாக தவறில்லை .நீங்க யார் யார் என்ன சொன்னார்-ன்னு தெரிந்து கொண்டதால யோசிக்க போயிட்டீங்க .நான் இப்ப தான் யார் யார் என்ன சொன்னாங்கண்ணு தெரிஞ்சுக்குற கட்டத்துல இருக்கேன்..ஹி..ஹிஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1160022221892045302006-10-05T12:23:00.000+08:002006-10-05T12:23:00.000+08:00தருமி ஐயா அவர்களுக்கு, இஸ்லாம் பற்றிய தங்களது கேள்...தருமி ஐயா அவர்களுக்கு, இஸ்லாம் பற்றிய தங்களது கேள்விகளுக்கு பதில்களை அனுப்ப நிறைய நேரங்களும் தகவல்களும் தேவைப்படுவதால் எழுத முடியவில்லை, இறைவனை குறிக்க அரபியில் 'அல்லாஹ்' என்று குறிப்பர்கள். ஆனால் 'அல்லாஹ்' என்ற வார்த்தை ஆண் பாலையும் குறிக்காது பெண் பாலையும் குறிக்காது அல்லது 'அலி'யையும் குறிக்காது அது தனித்துவம் பெற்ற வார்த்தை என்று தான் கூற வேண்டும். , தமிழில் 'அல்லாஹ்' என்ற வார்த்தைக்கு நிகரான வார்த்தை எதுவென்று தெரியவில்லை. ஏனெனில், 'கடவுள்' என்ற வார்த்தைக்கு கடவுளர் என்ற பன்மை பதம் உண்டு, இறைவன் கூட ஆண் பால் தான் இறைவி என்பது பெண் பால். ஆங்கிலத்தில் கூட GOD என்பது ஆண் பால் GODDESS என்பது பெண்பால். உண்மைபில் வார்த்தை பற்றாக்குறையினால் தான் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இதனால் தான் சூஃபி எனும் ஞானிகள் வார்த்தைகளை கட்டிக் கொண்டு மாரடிப்பதில்லை இறைவனது செய்திகளை பரிமாறிக் கொள்ள இதயமே சிறந்த வழியாகும் 'ஸீனா-ப- ஸீனா' அதாவது 'இதயத்திலிருந்து இதயத்திற்கு' என்பதாகும்.nagoreismailhttps://www.blogger.com/profile/04564372723214072907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1160021542294103112006-10-05T12:12:00.000+08:002006-10-05T12:12:00.000+08:00இஸ்லாமும் இயேசுவும்(ஈஸா நபி) என்ற இந்த கடற்புரத்தா...இஸ்லாமும் இயேசுவும்(ஈஸா நபி) என்ற இந்த கடற்புரத்தான் ஜோவின் பதிவில் மத நம்பிக்கைகள் கொண்ட நண்பர்கள் கருத்துகளுக்குள் இருக்கும் சந்தேகம்/கேள்வி/விளக்கங்கள் போன்றவற்றை அருமையாக பரிமாற்றம் செய்து கொள்கிறீர்கள் அல்லது அருமையாக விவாதம் செய்கிறீர்கள் ....மகிழ்ச்சி!<BR/><BR/><BR/>இதில் நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.<BR/><BR/>நீங்கள் நம்பும் ஒரு இறைவனை நம்பாமல் இருப்பவர்களை "நிராகரித்தோர்" (காஃபிர்) என்று சொல்கிறீர்கள் அதுவும் சரியே! <BR/><BR/>ஆதரவு/ஏற்பு என்ற ஒன்று இருந்தால் எதிர்ப்பு/மறுப்பு என்ற ஒன்றும் இருக்கும்.அதற்கு அவர்கள் ஒரு பெயர் கொடுத்துள்ளர்கள் அதுவும் பிரச்சனையில்லை.<BR/><BR/><BR/><BR/><B>அப்துல் குத்தூஸ் said... <BR/>//ஆனால் அவர்கள் வேறுபாடுகள் கொண்டனர்; அவர்களில் ஈமான் கொண்டோரும் உள்ளனர்; அவர்களில் நிராகரித்தோரும் (காஃபிரானோரும்) உள்ளனர்; //<BR/><BR/>//மூச்சுக்காற்று படுகின்ற எந்த காஃபிரும் சாகாமல் இருப்பதில்லை. // </B><BR/><BR/>ஆனால் நிராகரித்த காரணத்திற்காக அல்லது ஏற்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக "..மூச்சுக்காற்று படுகின்ற எந்த காஃபிரும் சாகாமல் இருப்பதில்லை...." என்று சொல்வது கடவுளின் வார்த்தையாகவே இருந்தாலும் கண்டிக்கத்தக்கது.<BR/><BR/>எந்த மதத்தைச் சார்ந்தாலும்/சாராவிட்டாலும் கடவுளை நம்பினாலும்/நம்பாவிட்டாலும் நல்லவன் நல்லவனே. அது போல் கெட்டவன் கெட்டவனே.<BR/><BR/><BR/>நல்லது கெட்டதை ஆராயத் தெரியாத ,சும்மா மூச்சுக் காற்றாலேயே கொலை செய்பவர் எப்படி கடவுளாக/தூதனாக இருக்க முடியும்? அது எந்த மதமாக இருந்தாலும்.<BR/><BR/><BR/>கடவுளை ஏற்காதவன் கெட்டவனாகத்தான் இருக்க வேண்டுமா? அல்லது நீங்கள் நம்பும் (சார்ந்துள்ள) மதத்தை நம்பாதவன் (காஃபிர்) அனைவரும் அயோக்கியர்களா? என்ன அய்யா சொல்கிறீர்கள்?<BR/><BR/><BR/><B>"தீர்ப்பு நாளில் மனிதன் எந்த மத்தவனாக இருந்தாலும் எந்தப் பாகுபாடும் இன்றி அவன் செய்த நல்லது/கெட்டது நன்மை/தீமை அடிப்படையில் (உங்கள்) இறைவன் தீர்ப்பு வழங்குவார் என்று சொல்லுங்கள்" </B>அதுதான் கடவுளுக்கு அழகு.<BR/><BR/><BR/>CBSE பாடத்திட்டத்தில் படிக்காதவன் எல்லாம் முட்டாள் என்று சொல்வதும்,எந்த பாடத்திட்டத்திலும் படிக்காதவன் எல்லாம் அயோக்கியன் என்றும் Generalize செய்வது எப்படித் தவறோ அதுபோல்தான் நீங்கள் சொல்வதும் தவறு.<BR/><BR/><BR/><B>வருத்தத்துடன் :-( </B><BR/><BR/>ஜோ,<BR/>விவாதத்தை திசை திருப்ப இதை நான் போடவில்லை.Generalize செய்து நிராகரித்தோர் (காஃபிர்) அனைவரையும் குற்றவாளிகளாக ஆக்கும் வரிகளுக்கு எனது கண்டனங்களைப் பதிவு செய்யவே இந்தப் பின்னூட்டம்.திசை திருப்பும் என்று கருதினால வெளியிட வேண்டாம்.Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1160019733968100702006-10-05T11:42:00.000+08:002006-10-05T11:42:00.000+08:00நிறைய இஸ்லாமிய நண்பர்கள் 'இங்கே' இருப்பதால் எனக்கு...நிறைய இஸ்லாமிய நண்பர்கள் 'இங்கே' இருப்பதால் எனக்குள்ள ஐயம் ஒன்று: இஸ்லாமிய வழக்கம் பற்றியது. <BR/><BR/>இறைவனைக் குறிக்கும்போதெல்லாம் ஆண்பால் ஒருமையைக் கைக்கொள்ளுவதும், நபி(களைப்) பற்றிக் குறிக்கும்போதெல்லாம் ஆண்பால் மரியாதைப் பன்மையையும் பயன்படுத்துவது ஏன்? அதிலும், இறைவனைக் குறிக்க எப்போதும் ஆண்பால் ஒருமையைக் கையாளுவது ஏன்? அராபிய மொழியிலிருந்து வந்த மொழி மாற்றத்தாலா அல்லது வேறு ஏதாவது காரணமா?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1160019444879186852006-10-05T11:37:00.000+08:002006-10-05T11:37:00.000+08:00ஜோ,உங்களுக்கு இந்தக் 'கேள்விகளின் காலம்' ஒரு நல்ல...ஜோ,<BR/>உங்களுக்கு இந்தக் 'கேள்விகளின் காலம்' ஒரு நல்ல ஆரம்பம் என்றே நினைக்கின்றேன். இந்த ஆரம்பத்தின் நீட்சியாக <A HREF="http://dharumi.blogspot.com/2005/10/87.html" REL="nofollow">எனது இண்டாம் கட்டளை </A> உங்களுக்கு விரைவில் 'சித்திக்க' என் வாழ்த்துக்கள். :)தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1160017479050614052006-10-05T11:04:00.000+08:002006-10-05T11:04:00.000+08:00உண்ர்ச்சி வசப்பட்ட அஸ்லம் அவர்களுக்கும் 'எங்கள் நப...உண்ர்ச்சி வசப்பட்ட அஸ்லம் அவர்களுக்கும் 'எங்கள் நபி' என்றூ எழுதியிருப்பதை பெரிது படுத்த வேண்டாம் என்ற இறைநேசனுக்கு நன்றி கலந்த ரமலான் வாழ்த்துக்கள்<BR/>- நாகூர் இஸ்மாயில்nagoreismailhttps://www.blogger.com/profile/04564372723214072907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1160014080036776212006-10-05T10:08:00.000+08:002006-10-05T10:08:00.000+08:00குமரன், வருகைக்கு நன்றி!//இன்று வந்த பின்னூட்டங்க...குமரன்,<BR/> வருகைக்கு நன்றி!<BR/>//இன்று வந்த பின்னூட்டங்களை இனிமேல் தான் படிக்கவேண்டும்.//<BR/><BR/>இப்போது படித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1160013056793671452006-10-05T09:50:00.000+08:002006-10-05T09:50:00.000+08:00நல்லடியார், உங்கள் விளக்கத்துக்கும் ,இனிய வார்த்த...நல்லடியார்,<BR/> உங்கள் விளக்கத்துக்கும் ,இனிய வார்த்தைகளுக்கும் நன்றி!<BR/><BR/>அபூ முஹை,<BR/> தனிப்பதிவிட்டு விளக்கியதற்கு மிக்க நன்றி! உங்கள் பதிவில் என் பதில்களை கொடுத்திருக்கிறேன்.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1159994283259318272006-10-05T04:38:00.000+08:002006-10-05T04:38:00.000+08:00அன்பின் சகோதரர் ஜோ அவர்களுக்கு!''இஸ்லாமும் இயேசு...அன்பின் சகோதரர் ஜோ அவர்களுக்கு!<BR/><BR/>''இஸ்லாமும் இயேசுவும்(ஈஸா நபி)'' என்ற தலைப்பில் இயேசு என்ற ஈஸா (அலை) அவர்களின் சிறப்புக்கு காரணம் என்ன? என்று முஸ்லிம்களிடம் கேள்வியை வைத்தீர்கள்.<BR/><BR/>அதற்கான திருக்குர்ஆன் விளக்கத்தை <A HREF="http://abumuhai.blogspot.com/2006/10/blog-post_04.html" REL="nofollow">''நபி இயேசுவின் சிறப்புக்கு காரணம் என்ன?'' </A>என்ற பதிவில் சொல்லியிருக்கிறேன். எழுதியவற்றில் சந்தேகமிருந்தால் மேலும் கேள்விகளை எழுப்புங்கள்!<BR/><BR/>அதோடு பைபிள் பற்றி என் கேள்விகளையும் வைத்துள்ளேன் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன் இன்ஷா அல்லாஹ் நன்றி!<BR/><BR/>அன்புடன்,<BR/>அபூ முஹைஅபூ முஹைhttps://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1159993278813494002006-10-05T04:21:00.000+08:002006-10-05T04:21:00.000+08:00//இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் அல்லாஹ் தான...//இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் அல்லாஹ் தான் நாடியவருக்கு ஒவ்வொரு சிறப்பை கொடுக்கின்றான். அச்சிறப்பைப்பற்றி ஆராயும் பொழுது, அது அக்காலத்திற்கு தேவையானதாகவும் உள்ளது. அவன் போட்ட கணக்கிற்கு நாம் விளக்கம் அளிக்க முடியுமாங்க.// - அப்துல் குத்தூஸ்<BR/><BR/>சகோதரர் ஜோ,<BR/><BR/>உங்களின் கேள்வியான "இயேசு- வுக்கு இந்த தனிச்சிறப்பு என்பதற்கு இஸ்லாம் என்ன விளக்கம் சொல்கிறது ?" என்பதற்கு சகோதரர் அப்துல் குத்தூஸின் மேற்குறிப்பிட்ட விளக்கம் போதுமானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.<BR/><BR/>ஆதம் நபி (அலை..) முதல் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வரை மனிதர்களுக்கு கொண்டு வந்தவை ஓரிரைக் கொள்கையே. அவ்வாறு பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு சமூக மக்களிடம் அதை எடுத்துச் செல்லும் போது, சில அற்புதங்களோடு எடுத்துச் சொல்ல இறைவன் அருளினான்.<BR/><BR/>மூஸா (அலை...) அவர்கள் காலத்தில் சூன்யம் செய்பவர்களின் ஆதிக்கம் மிகைத்திருந்த போது, அத்தகைய சூனியக் காரர்களுக்கு சவாலாக அற்புதங்களைச் செய்து காட்டினார்கள். ஈஸா (அலை...) அவர்களின் காலத்தில் மருத்துவ அற்புதங்கள் மேலோங்கி இருந்தன. இயேசுவின் பிறப்பே மருத்துவ அற்புதங்களுக்கு சவாலாக இருந்ததோடு, இயேசுவுக்கு வேறு சில நோய் தீர்க்கும் அற்புதங்களையும் இறைவன் அருளினான். அதேபோல் இறுதி நபியாக வந்த முஹம்மது நபியின் காலத்தில் கவிஞர்கள், இலக்கிய்வாதிகளின் ஆதிக்கம் மேலோங்கி ஓரிரைக் கொள்கை பின் தள்ளப்பட்டபோது, அன்றைய கவிஞர்களும் இலக்கியவாதிகளும் வாயடைக்கும் விதமாக எழுதப்படிக்கத் தெரியாத அச்சமூகத்தவரால் ந்ன்கு அறியப்பட்டிருந்த முஹம்மது நபி மூலம் இலக்கியச் செழுமையும், கவித்திறனும் கொண்ட திருக்குர்ஆன் எனும் அற்புத வாழ்க்கை நெறியை உலக மக்கள் அனைவருக்குமாக இறைவன் அருளினான். இதையே முஹம்மது நபி தனக்கு வழங்கப் பட்ட அற்புதமாகச் சொன்னார்கள்.<BR/><BR/>ஆக, யாருக்கு எந்த அற்புதங்களை வழங்கி மக்களை எம்முறையில் நல்வழிப்படுத்த வேண்டுமென்று இறைவன் நாடி இருந்தானோ அதன்படியே ஒவ்வொரு நபிக்கும் அற்புதங்களோடோ அல்லது இல்லாமலோ ஓரிரைக் கொள்கையை கொண்டு செல்லும் கடமை இருந்தது. <BR/><BR/>ஆதம் நபி முதல் முஹம்மது நபி வரையிலான நபிமார்கள் இறைவனால் அனுப்பட்ட தூதுவர்கள் என்று நம்புவது முஸ்லிம்களின் தலையாய கடமைகளுல் ஒன்று. ஆக, <B>நம்</B> நபிமார்கள் அனைவரும் சிறப்பிற்குறியவர்களே!<BR/><BR/>பி.கு: மதம் சார்ந்த ஐயங்களை தீர்க்கும் விதமாக பரஸ்பர கருத்துப் பரிமாற்ற பதிவெழுதுவது எப்படி என்று உங்களிடம் டியூசன் எடுக்க வேண்டுமய்யா!<BR/><BR/>அன்புடன்நல்லடியார்https://www.blogger.com/profile/13415231442849528185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1159977919935761092006-10-05T00:05:00.000+08:002006-10-05T00:05:00.000+08:00சுவனப்பிரியன்,உங்கள் நீண்ட விளக்கத்துக்கு நன்றி!சுவனப்பிரியன்,<BR/>உங்கள் நீண்ட விளக்கத்துக்கு நன்றி!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1159968709376661072006-10-04T21:31:00.000+08:002006-10-04T21:31:00.000+08:00நணபர் ஜோவுக்கு என்னுடைய பதில!//ஆதிமனிதன் தவிர மற்ற...நணபர் ஜோவுக்கு என்னுடைய பதில!<BR/><BR/>//ஆதிமனிதன் தவிர மற்றெல்லா நபிகளும் இயற்கையான முறையில் பிறந்த போது இயேசு மட்டும் விசேடமான முறையில் அன்னை மரியாளிடம் பரிசுத்தமான முறையில் பிறக்கிறார் .இறுதித் தூதர் முகமதுவுக்கே கிடைக்காத இந்த தனிச்சிறப்பை அல்லா ஈஸா நபிக்கு மட்டும் கொடுக்க வேண்டிய காரணம் என்ன ?இது பற்றி இஸ்லாத்தில் என்ன விளக்கம் சொல்லப்படுகிறது ?//<BR/><BR/><BR/>'மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள். அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்.'<BR/><BR/>4 : 1 - குர்ஆன்<BR/><BR/>ஏசுவின் பிறப்பை விட எந்த தாய் தகப்பனும் இல்லாமல் சுட்ட களிமண்ணால் படைக்கப் பட்ட ஆதமின் படைப்பே ஆச்சரியப் படத் தக்கதாகும். அதிலும் அவரிலிருந்தே ஏவாளையும் படைத்தது அதைவிட ஆச்சரியத்திற்குரியதாகும். இவை எல்லாம் இறைவன் தன்னால் எதுவும் முடியும் என்று மக்களுக்கு விளக்குவதற்காக இறைவன் ஏற்படுத்திய ஏற்பாடுகள். அதே போல் உலகில் அவதரித்த தூதர்களிலிருந்து அனைத்து மக்களுக்கும் தந்தை என்ற சிறப்பான அந்தஸ்தையும் ஆதம் பெறுகிறார். இது போல்அந்தந்த காலத்தில் அவதரித்த தூதர்களுக்கு சில சிறப்புகளை இறைவன் வழங்குவான் இதை வைத்து ஒரு தூதரை உயர்த்தியும் மற்றவரை தாழ்த்தியும் பேசுவது இஸ்லாத்தில் தடுக்கப் பட்டுள்ளது. 'மற்ற தூதர்களை விட என்னை உயர்த்திப் பேச வேண்டாம்' என்ற தடையையும் முகமது நபி விதித்துள்ளார்.<BR/><BR/>'இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு அனுப்பப் பட்டஇறைவனின் தூதர். எனக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப் படுத்துபவன். எனக்குப் பின்னர் வரவுள்ள அஹமத் என்ற பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவன்.' என்று மர்யமின் மகன் ஈஸா கூறியதை நினைவூட்டுவீராக!.<BR/><BR/>61 : 6 - குர்ஆன்<BR/><BR/>'முகம்மதே! உம்மை மனித குலத்துக்கு தூதராக அனுப்பியுள்ளோம்'<BR/><BR/>4 : 79 - குர்ஆன்.<BR/><BR/>இதன் மூலம் ஏசு நாதர் இஸ்ரவேலர்களுக்கு மட்டும் இறைத் தூதராக அனுப்பப் பட்டார். ஆனால் முகமது நபியோ உலக முடிவு நாள் வரை மனித குலத்துக்கு தூதராக அனுப்பப் பட்டுள்ளார். உலக முடிவு நாளன்று திரும்ப பூமிக்கு வரப் போகும் ஏசு நாதரும் முகமது நபியைப் பின் பற்றி அவரை தூதராக ஏற்றுத்தான் இறக்க இருக்கிறார்கள். இதன் மூலம் உங்களின் 'அவரை விட இவர் சிறந்தவர்' என்ற கருத்தும் அடிப் பட்டுப் போகிறது. <BR/><BR/>'எந்தப் பிள்ளையையும் ஏற்படுத்திக் கொள்வது இறைவனுக்குத தகுதியானதன்று. அவன் தூயவன்.'<BR/><BR/>19 : 35 - குர்ஆன்<BR/><BR/>இறைவனின் மகன் ஏசு என்று எண்ணுவது இறைவனின் தகுதிக்கு இழிவு என்று இறைவனே பிரகடனப் படுத்துகிறான்.<BR/><BR/>'தன் முகத்தை இறைவனுக்குப் பணியச் செய்து நல்லறம் செய்து உண்மை வழியில் நின்ற இப்றாகீமின் மார்க்கத்தைப் பின் பற்றி நடந்தவரை விட அழகிய மார்க்கத்திற்குரியவர் யார்? இறைவன் இப்றாகீமை உற்ற தோழராக்கிக் கொண்டான்.'<BR/><BR/>4 : 125 - குர்ஆன்<BR/><BR/>ஏசு என்னுடைய மகன் அல்ல என்று மறுக்கும் இறைவன் ஆபரஹாம் என்னுடைய உற்ற தோழர் என்று அழைக்கிறான். இதனால் ஏசுவை தாழ்த்தியும் ஆப்ரஹாமை உயர்த்தியும் பேசலாமா என்றால் அவ்வாறு பேசுவது தவறு என்று இஸ்லாம் கண்டிக்கிறது.<BR/><BR/>'இத்தூதர்களில் சிலரை மற்றும் சிலரை விட சிறப்பித்திருக்கிறோம். அவர்களில் சிலரிடம் அல்லாஹ் பேசியுள்ளான். அவர்களில் சிலருக்கு பல தகுதிகளை உயர்த்தியிருக்கிறான்.'<BR/><BR/>2 : 253 - குர்ஆன்<BR/><BR/>இதன் மூலம் சில இறைத் தூதர்களுக்கு மற்ற தூதர்களை விட சிறப்புகளை அளித்திருப்பதாக இறைவன் கூறுகிறான்.தூதர் சாலமனுக்கு கொடுத்த ஆட்சி அதிகாரம்,மோசேயுடன் இறைவன் நேரிடையாகப் பேசியது, ஏசுநாதர் இன்றும் உயிருடன் இருப்பது, முகமது நபி இறுதி நபியாகவும், உலக மக்கள் அனைவருக்கும் தூதராகவும் இருப்பது, ஆப்ரஹாமை தன் தோழராக்கிக் கொண்டது போன்ற சிறப்புகளைக் கூறலாம். இந்த சிறப்புகளை வைத்து ஒரு தூதரை உயர்த்தியும் மற்ற தூதரைத் தாழ்த்தியும் விவாதிப்பது பாவம் என்று குர்ஆன் பின் வருமாறு போதிக்கிறது.<BR/><BR/>'இறைவனையும், எங்களுக்கு அருளப் பட்டதையும் தம் இறைவனால் ஆப்ரஹாம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாகோப், மற்றும் அவரது வழித் தோன்றல்களுக்கு அருளப் பட்டதையும் மோசேவுக்கும், ஏசுவுக்கும் வழங்கப் பட்டதையும், ஏனைய தூதர்களுக்கு தமது இறைவனிடமிருந்து வழங்கப் பட்டதையும் நம்பினோம். அவர்களுக்கிடையே பாகுபாடு காட்ட மாட்டோம் அவனுக்கே நாங்கள் கட்டுப் பட்டவர்கள்' என்று கூறுங்கள்.<BR/><BR/>2 : 136 - குர்ஆன்.<BR/><BR/>இறைத் தூதர்களிடையே பாகுபாடு காட்டக் கூடாது என்று இறைவன் தடுத்துள்ளதால் அந்த தூதர்கள் எதைச் சொன்னார்களோ அதன்படி நடந்து இறைவனின் அன்பை நாம் அனைவரும் பெறுவதற்கு முயற்ச்சிப்போமாக.<BR/><BR/>இறைவனே மிக அறிந்தவன்<BR/><BR/>என்றும் அன்புடன்<BR/>சுவனப்பிரியன்suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10060619.post-1159958982940227312006-10-04T18:49:00.000+08:002006-10-04T18:49:00.000+08:00பதிவையும் நேற்று மாலை வரை இருந்த பின்னூட்டங்களையும...பதிவையும் நேற்று மாலை வரை இருந்த பின்னூட்டங்களையும் படித்தேன் ஜோ. <BR/><BR/>இன்று வந்த பின்னூட்டங்களை இனிமேல் தான் படிக்கவேண்டும்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com